உள்ளூர் செய்திகள்

மதுக்கூர் பகுதியில் நாளை மின் தடை

Published On 2023-08-22 09:53 GMT   |   Update On 2023-08-22 09:53 GMT
  • மதுக்கூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மதுக்கூர்:

மதுக்கூர் உதவி செயற் பொறியாளர் சங்கர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

நாளை ஆகஸ்டு 23-ந்தேதி புதன்கிழமை அன்று மதுக்கூர் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனை முன்னிட்டு மதுக்கூர் நகர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News