உள்ளூர் செய்திகள்
- திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் துணை மின்நிலையத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது.
இதையொட்டி பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலைஅடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழில்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, முத்தனம்பட்டி, காப்பிளியப்பட்டி,
நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில்நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.