உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் நாளை மின் தடை

Published On 2023-04-27 05:01 GMT   |   Update On 2023-04-27 05:01 GMT
  • காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஆகவே அப்போது காஞ்சிபுரம் நகரம் மற்றும் நகரத்தை ஒட்டியுள்ள சில பகுதிகளான பாலியர்மேடு, திருகாலிமேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம் மற்றும் வேளியூர் துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் தடை ஏற்படும்.

இந்த தகவலை காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News