உள்ளூர் செய்திகள்

கடையம் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.


கடையம் பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள்

Published On 2022-06-20 09:03 GMT   |   Update On 2022-06-20 09:03 GMT
  • எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அ.தி.மு.க. அமைய வேண்டும்.
  • தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

கடையம்:

அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதர வாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட அ.தி.மு.க.வக்கீல் பிரிவு துணைச் செயலாளர் புங்கம்பட்டி ராஜசேகர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அ.தி.மு.க. அமைய வேண்டும் என ஒட்டிய சுவரொட்டிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடையம், ஆழ்வார்குறிச்சி, பாவூர்சத்திரம், பூலாங்குளம், பொட்டல்புதூர் உள்பட தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News