உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்த போலீசார்
- மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார்.
கடலூர்:
பண்ருட்டி பகுதியிலுள்ள அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.எஸ்.பி. ஷபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மேற்பார்வையில் பயிற்சி சப்.இன்ஸ்பெக்டர் விஜய் பள்ளி வளாகத்திற்கு இன்று நேரில்சென்று பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். பின்னர்ஒழுங்கீனமாகவும்,தாறுமாறாகவும்சிகை அலங்காரம்செய்து வந்தமாணவர்களைஅழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார். போலீசாரின் செயலை பொதுமக்கள் பாராட்டினார்.