உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே இளம்பெண்ணை தாக்கிய கணவருக்கு வலைவீச்சு

Published On 2023-03-21 08:58 GMT   |   Update On 2023-03-21 08:58 GMT
  • சுப்பிரமணியனின் தாயார் கடந்த 1 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்.
  • ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், பரமேஸ்வரியை தாக்கினார்.

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி (38). சுப்பிரமணியனின் தாயார் கடந்த 1 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். அவரது 8 பவுன் தங்க செயினை பரமேஸ்வரி தனது அண்ணன் செந்தில் குமாரிடம் கொடுத்து வைத்துள்ளார். சுப்பிரமணியன் மது அருந்தி விட்டு வந்து, தங்க செயினை தருமாறு பரமேஸ்வரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்றும் செயினை தருமாறு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், பரமேஸ்வரியை தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக சுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News