உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

மாயமான பள்ளி மாணவி மீட்பு

Published On 2022-06-24 07:08 GMT   |   Update On 2022-06-24 07:08 GMT
  • வடமதுரை பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி மாயமானார்
  • அவரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

வடமதுரை:

வடமதுரை அருகில் உள்ள செங்குறிச்சி ஆலம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் 11-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். அவரை மீண்டும் படிக்க சொல்லி பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் நாகசாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவி காங்கேயம் பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மாணவியை மீட்டு அவருக்கு அறிவுரை கூறி போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News