உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே போலீஸ் ஜீப் கவிழ்ந்து இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்

Published On 2023-08-03 09:28 GMT   |   Update On 2023-08-03 09:28 GMT
  • ஜீப்பை புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஒட்டி வந்தார்.
  • கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்தது.

கடலூர்: 

கடலூர் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ஸ்ரீபிரியா. இவர் வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். ஜீப்பை புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஒட்டி வந்தார். இரவு 8.20 மணியளவில் ஜீப் பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் கவிழ்ந்தது. இதில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா , சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் ஒரு போலீசார் உள்ளிட்ட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த போலீசார் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News