உள்ளூர் செய்திகள்

திண்டிவனம், ஒலக்கூர் பகுதிகளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனை

Published On 2023-08-14 09:18 GMT   |   Update On 2023-08-14 09:18 GMT
  • ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் உத்தரவின் பேரில் ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், ரோஷனை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார், திண்டிவனம் சப்- இன்ஸ்பெக்டர்ஸ்டாலின் மற்றும் போலீசார் திண்டிவனம் ரோஷனை ஒலக்கூர் போன்ற போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்டாம்பிங் ஆபரேஷன் என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பொருட்டு விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகப்படுப்படியான நபர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சரியான ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News