உள்ளூர் செய்திகள்

பிணமாக மிட்கப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

சேலத்தில் அடுத்தடுத்து 2 பிணங்கள் மீட்பு அடையாளம் காண போலீசார் தீவிரம்

Published On 2023-03-29 09:45 GMT   |   Update On 2023-03-29 09:45 GMT
  • திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார்.
  • சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

சேலம்:

சேலம் டவுன் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.

அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது உடலை மீட்ட டவுன் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பிணமாக மீட்கப்பட்ட 2 பேர் குறித்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News