உள்ளூர் செய்திகள்

சேலத்தில் சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

Published On 2023-01-08 22:18 IST   |   Update On 2023-01-08 22:18:00 IST
  • சிறுமி திடீரென மயங்கி விழுந்ததில் பாட்டி அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
  • வாலிபர் ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). பெற்றோரை இழந்த இவர், அன்னதானப்பட்டி பகுதிக்கு கூலிவேலைக்கு வந்தார். அப்போது 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தார். இதற்கிடையில் வாலிபர் ஆகாஷ் அடிக்கடி சிறுமியை சந்தித்துள்ளார். கடந்த 6-ந் தேதி சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.

இது பற்றி சிறுமியிடம் விவரத்தை கேட்டபோது, வாலிபர் ஆகாஷ், தன்னுடன் நெருங்கி பழகினார் எனவும், மேலும் அவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டார் எனவும் கண்ணீர் மல்க கூறினார்.

இது குறித்த புகாரின்பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, வாலிபர் ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருப்பதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News