உள்ளூர் செய்திகள்
பா.ம.க. மாவட்ட செயலாளர் நியமனம்
- பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளராக லோ.ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
- புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மத்திய மாவட்ட செயலாளர் லோ.ஏழுமலை கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
திருப்போரூர்:
பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளராக லோ.ஏழுமலை நியமிக்கப்பட்டுள்ளார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் பரிந்துரையின்பேரில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நியமனம் செய்தனர்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மத்திய மாவட்ட செயலாளர் லோ.ஏழுமலை கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.