உள்ளூர் செய்திகள்

கார் மோதி பிளஸ்-2 மாணவன் பலி

Published On 2023-02-07 09:17 GMT   |   Update On 2023-02-07 09:17 GMT
  • ஜி.டி.ஆர். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டர்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
  • செம்மேடு தனியார் லாட்ஜ் அருகே மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியது.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திண்ண–னுார்நாடு சின்ன சோளக்கண்ணிப்பட்டியை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மகன் அகிலன் (வயது 17).

கொல்லிமலை அருகே உள்ள வாழவந்திநாடு, பெருமாபட்டியை சேர்ந்த ஜெயசங்கர் என்பவருடைய மகன் வசந்த் (17).

இவர்கள் 2 பேரும் செம்மேடு ஜி.டி.ஆர். அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இருவரும் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டர்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வாழவந்திநாடு தண்ணிமாத்தி பகுதியை சேர்ந்த பாசகுமார், (48) என்பவர் செம்மேட்டில் இருந்து சோளக்காட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்தார்.

செம்மேடு தனியார் லாட்ஜ் அருகே மோட்டார்சைக்கிளும், காரும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் பள்ளி மாணவன் அகிலன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு மாணவன் வசந்த் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சில் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் அகிலன் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த விபத்து சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி–றார்கள்.

கார் மோதி பிளஸ் -2 மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News