பிளஸ்-2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
- பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளியிடப்பட்டது.
- வருகிற ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள துணைத் தேர்வை எழுதலாம்.
சேலம்:
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந்தேதி வெளி யிடப்பட்டது.
இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வுக்கு செல்லாதவர்கள் வருகிற ஜூன் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ள துணைத் தேர்வை எழுதலாம். இந்த துணை தேர்வை எழுத மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களிலும் கடந்த 11-ந்தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.
தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
நாளை விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கூடுதல் கட்டணத்துடன் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் இணை யவழியில் விண்ணப்பிக்க லாம்.
இந்த தகவலை பள்ளிக்க ல்வித்துைற அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.