உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்; மாவட்டத்தில் 26 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்

Published On 2023-03-13 10:04 GMT   |   Update On 2023-03-13 10:04 GMT
  • 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.
  • 225 அலுவலக பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் இன்று பிளஸ்-2 பொது தேர்வு தொடங்கியது.

அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை தேர்வு நடக்கிறது.

இந்த நிலையில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

இதில் மாணவர்கள் 12 ஆயிரத்து 492 பேரும், மாணவிகள் 14 ஆயிரத்து 312 பேரும் அடங்குவர்.

தேர்வு பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் 1961 அறை கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுது பவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Tags:    

Similar News