உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் கீழ்மலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
- கலெக்டர் உத்தரவின்பேரில் குப்பம்மாள்பட்டி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- மஞ்சள் பைகள் வழங்கப்பட்டு, முக்கிய விதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் சென்றது.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தரவின்படி கொடைக்கானல் கீழ்மலை கே.சி.பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பம்மாள்பட்டி கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா இளையராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுமக்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டு, முக்கிய விதிகள் வழியாக விழிப்புணர்வு ஊர்வலம் சென்றது. முடிவில் ஊராட்சி செயலர் ரெங்கராஜேந்திரன் நன்றி கூறினார்.