உள்ளூர் செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை புதிய கட்டிடம் கட்ட அமைச்சரிடம் மனு

Published On 2023-05-24 09:05 GMT   |   Update On 2023-05-24 09:05 GMT
  • பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது.
  • தென்காசி வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம், செங்கோட்டை தி.மு.க. முன்னாள் நகர்மன்ற தலைவரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.ரஹீம் கோரிக்கை மனுவினை வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரில் உள்ள பொதுப்பணி துறை அலுவலக வளாகத்தில் சுமார் 6 ஏக்கர் இட வசதி உள்ளது. இங்கு உள்ள விருந்தினர் ஆய்வு மாளிகை கட்டிடம் மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்பது எங்களது பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. மேலும் ஆய்வு மாளிகை கட்டிடம் அமையும் பட்சத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வரும் அரசு துறை அதிகாரிகள் தங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே புதிய கட்டிடம் அமைவதற்கு தாங்கள் ஆவணம் செய்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News