உள்ளூர் செய்திகள்

நிலக்கோட்டையில் இருந்து சென்னைக்கு தபால் மூலம் கோரிக்கைகளை ஊராட்சி செயலர்கள் அனுப்பினர்.

தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம்

Published On 2022-12-14 03:54 GMT   |   Update On 2022-12-14 03:54 GMT
  • நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
  • நிறைவேற்ற தவறினால் அடுத்து 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அனுப்பப்பட்டது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பாக மாவட்டத் தலைவர் பாண்டியராஜ் தலைமையில் தமிழக அரசுக்கு 5 கோரிக்கைகளை வலியுறுத்த தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கைகள் தபால் மூலம் 327 தபால்கள் அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளது:-

கிராம ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கிடவும், பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு கால ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கிடவும், ஊராட்சி பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்களுக்கு சிறப்பு கால ஓய்வூதியம் வழங்கிடவும், ஓய்வூதிய தொகையாக வழங்கும் பணத்தொகையாக ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சம் ஆக உயர்த்திடவும்,

மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர்களாக பணியாற்றும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியமாக ரூ.5000 வழங்கிடவும், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலம் வரை ஊதியம் அரசு கருவூலம் மூலமாக வழங்கிட கோரியும், ஊரக வளர்ச்சித் துறையில் காலம் நேரம் கருதாமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முதல் கட்ட போராட்டமாக தபால் அனுப்பும் போராட்டமும், கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் அடுத்து 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் அனுப்பப்பட்டது.


Tags:    

Similar News