உள்ளூர் செய்திகள்
குமாரபாளையம் தாசில்தாரிடம் இலவச பட்டா கேட்டு மனு
- ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி அதன் தலைவர் கண்ணன் தலைமையில் தாசில்தார் சண்முகவேலிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
- மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், ஜனநாயக மக்கள் கழகம் சார்பில் இலவச வீட்டுமனை வேண்டி அதன் தலைவர் கண்ணன் தலைமையில் தாசில்தார் சண்முகவேலிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து கண்ணன் கூறுகையில், எங்கள் மனுக்காள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கா விட்டால் போராட்டங்கள் நடத்துவோம் என்றார். இதில் நிர்வாகிகள் குமார், குழந்தை வேல், மூர்த்தி, சுந்தரராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.