உள்ளூர் செய்திகள்
கடையம் பகுதியில் கல்லூரி அமைக்க கோரி தருமபுர ஆதீன மடாதிபதியிடம் மனு
- கடையம் பகுதியில் கல்லூரி அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளிடம் மனு கொடுத்தனர்.
- ஏழை, எளிய பெண்களுக்கு திருமண உதவி நிதி வழங்க கோரியும் மனு கொடுத்தனர்.
கடையம்
சிவசைலம் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள் கடந்த 2 நாட்களாக சிவசைலத்தில் தங்கி உள்ளார்.
கடையம் ஒன்றியம் 23 பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கடையம் பகுதியில் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும், ஏழை, எளிய பெண்களுக்கு திருமண உதவி நிதி வழங்க கோரியும் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளிடம் மனு கொடுத்தனர்.
அப்போது கீழாம்பூர் மாரிசுப்பு, அணைந்தபெருமாள்நாடானூர் அழகுதுரை, பாப்பாங்குளம் முருகன், அடைச்சாணி மதியழகன், திருமலையப்பபுரம் மாரியப்பன் ஆகிய பஞ்சாயத்து தலைவர்கள் உடன் இருந்தனர்.