உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

Published On 2023-07-11 08:08 GMT   |   Update On 2023-07-11 08:08 GMT
  • கால நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் பெரம்பலூரில் நடைபெற்றது
  • மாவட்ட செயலாளர் ராஜா கையெழுத்து இட்டு தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்,

பா.ம.க.வின் பெரம்பலூர் மாவட்ட பசுமை தாயகம் அமைப்பு சார்பில் காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நேற்று மாலை தொடங்கப்பட்டது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை எதிரே நடந்த இந்த கையெழுத்து இயக்கத்தை அமைப்பின் மாவட்ட செயலாளர் ராஜா என்ற காட்டு ராஜா கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அந்த அமைப்பினர், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

Tags:    

Similar News