அ.தி.மு.க.புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம்
- ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்றது
- உறுப்பினர்களை அதிகளவு சேர்க்க தீர்மானம்
குன்னம், ஏப்.11-
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் கொளக்காநத்தத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கிளைக் கழகங்களுக்கும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கும் விழா, ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா, மாவட்ட பாசறை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய துணை சேர்மன் சுசீலா, ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிமுத்து, ஒன்றிய இளைஞரணி நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மோகன், கண்ணன், கெளக்கா நத்தம் நிர்வாகிகள் துரைராஜ், கதிர்வேல், இளங்கோவன், வக்கீல் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அதிகமாக புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, கிழக்கு ஒன்றியத்தில் தீவிரமாக கட்சியை வளர்ப்பது உள்பட பல்வேறு கருத்துக்களை ஒன்றிய செயலாளர் கர்ணன் கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.