உள்ளூர் செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி

Published On 2022-12-02 14:59 IST   |   Update On 2022-12-02 14:59:00 IST
  • லாரி மோதி வாலிபர் பலியானார்.
  • சாலையில் சென்று கொண்டிருந்தார்.

பெரம்பலூர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா சீதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் டாஸ்மாக் கடையில் லோடுமேனாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை செட்டிகுளம் டாஸ்மாக் கடையில் லோடு இறக்குவதற்காக சிறுவயலூர்-குரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரியில் மோதி சம்பவ இடத்திலே மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News