உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

Published On 2022-09-04 08:26 GMT   |   Update On 2022-09-04 08:26 GMT
  • மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
  • சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் கீழப்பெரம்பலூர் அய்யனார் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது குன்னம் அருகே உள்ள வ.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாளின் மகன் ஆனந்த் (வயது 25) என்பவர் சண்முகத்தின் மோட்டார் சைக்கிளை திருடி, தள்ளிக்கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து சண்முகம் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தார். பின்னர் அவர் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News