உள்ளூர் செய்திகள்
- தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
- குழந்தை இல்லாத ஏக்கம்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் செந்தில் (வயது 28). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பவானி(22) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது குடும்ப பிரச்சினையில், குடி போதையில் இருந்த செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்"