உள்ளூர் செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2023-06-25 11:54 IST   |   Update On 2023-06-25 11:54:00 IST
  • மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் :

பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் செல்வம் (வயது 29). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கனகவள்ளி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். செல்வத்துக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம். இதனால் மன உளைச்சலில் மதுவும் குடித்து வந்தார். கடந்த 22-ந்தேதி காலை 10 மணியளவில் செல்வம் அதேபகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் வைத்து மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக தனது பெரியப்பாவிற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மயங்கி கிடந்த செல்வத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்வம் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News