உள்ளூர் செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை

Published On 2023-06-29 08:08 GMT   |   Update On 2023-06-29 08:08 GMT
  • குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகுபாடி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சசிகலா(வயது 45). இவர்களுக்கு திருமணம் ஆகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் சசிகலா மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் சசிகலா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News