உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை - லப்பைகுடிகாட்டில் 77 மி.மீ. கொட்டியது

Published On 2023-11-26 06:14 GMT   |   Update On 2023-11-26 06:14 GMT
  • வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
  • பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மொத்த மழை அளவு 400 மி.மீ. பதிவானது. சராசரியாக 36.36 மி.மீ. மழை பெய்திருந்தது.

பெரம்பலூர்

வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக மழை செய்தது. அதிகபட்சமாக லெப்பைகுடிகாடு பகுதியில் 77 மீ.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. இரையூர், தழுதலை ஆகிய பகுதியில் 58 மி.மீ., வி.களத்தூர், வேப்பன்பட்டி ஆகிய இடங்களில் 42 மி.மீ. மழை அளவு பதிவாகி இருந்தது. குறைந்த பட்சமாக பாடாலூரில் 2 மி.மீ. பதிவானது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மொத்த மழை அளவு 400 மி.மீ. பதிவானது. சராசரியாக 36.36 மி.மீ. மழை பெய்திருந்தது.

Tags:    

Similar News