பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி
- பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்
பெரம்பலூா் :
பெரம்பலூா் மதன கோபாலபுரத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாக காஸ்ட்யூம் ஜூவல்லரி தயாரிப்பு மற்றும் தொழிற்பயிற்சி பெற பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் டி. ஆனந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
13 நாள்களுக்கு காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை இலவசமாக காஸ்ட்யூம் ஜூவல்லரி தயாரிப்பு, தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இப் பயிற்சியின்போது, காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
இதில், நகை வடிவமைப்பு, வெளிப்புற, உள்புற வடிவமைப்பு, மூட்டு வடிவமைப்பு, நகைகளின் வெவ்வேறு பகுதிகளை அசெம்பிளிங் செய்து புதிய நகைகளை உருவாக்குதல், மோதிரம், நெக்லஸ், வளையல்கள், சங்கிலி, ஸ்டெட், டாலா்கள் செய்தல், டெரகோட்டா, மணப்பெண் நகை அலங்கார செட், நகைகளை பேக்கிங் செய்யும் முறை மற்றும் விலை நிா்ணயம் செய்தல் ஆகியவவை வல்லுநா்களால் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடிவில் வங்கிக் கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்,
விருப்பமுள்ளவா்கள் பெரம்பலூா் மதனகோபாலபுரத்தில் ஐஓபி வங்கி மாடியில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
தேவையான சான்றுகளை விண்ணப்பத்துடன் இணைத்து, ஜூலை 15 ஆம் தேதி நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்பவா்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவாா்கள்.