- பெரம்பலூரில் ரோவர் கல்வி குழும தலைவர் டாக்டர் வரதராஜனின் 80 வது பிறந்தநாள் விழா
- வைகோ எம்.பி. சிறப்பு மலரை வெளியிட்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் ரோவர் கல்வி குழும தலைவர் டாக்டர் வரதராஜனின் 80 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.ரோவர் கல்வி நிறுவன வளாக கூட்டரங்கில் நடந்த விழாவிற்கு ரோவர் கல்வி குழும துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன் தலைமை வகித்தார். தூய யோவான் சங்க அறக்கட்டளை இயக்குநர் மகாலெட்சூமி, இயக்குநர்கள் பவானி, ரேகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக பொதுசெயலாளர் வைகோ ரோவர் வரதராஜனின் 80-வது பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார். அமைச்சர்கள் நேரு, சிவசங்கர், எம்பி பாரிவேந்தர், எம்எல்ஏக்கள் பிரபாகரன், சின்னப்பா, கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்தின், தனலட்சூமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசூப்ரமணியம், கிறிஸ்டியன் கல்வி நிறுவன தலைவர் கிறிஸ்டோபர், செயலாளர் மித்ரா உட்பட பலர் பேசினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் அட்சயகோபால், காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் வக்கீல் தமிழ்செல்வன், அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், திமுக பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் பரமேஷ்குமார், வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாநில பொருளாளர் செந்திலதிபன், மாநில துணை பொதுசெயலாளர் ரொக்கையா, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரோவர் கல்விநிறுவன அலுவலக மேலாளர்கள் ஆனந்தன், சேகர், ஜெயசீலன், ஒருங்கிணைப்பாளர் சக்தீஷ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.