உள்ளூர் செய்திகள்

துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி தொடக்கம்

Published On 2023-06-02 06:41 GMT   |   Update On 2023-06-02 06:41 GMT
  • துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி தொடங்கபட்டது
  • இன்னும் 3 மாதத்தில் கோவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா துங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக தேர் செய்ய வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் புதிதாக தேர் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்ததை ஏற்று புதிதாக தேர் செய்ய ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தேர் செய்ய முதற்கட்டமாக ரூ.9 லட்சம் வழங்கப்பட்டு தேர் செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.

தற்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் 2-ம் கட்டமாக ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையை கோயில் தர்மகர்த்தா ராஜாங்கம், ஸ்தபதி மணிகண்டன் ஆகியோரிடம் வழங்கினார். பின்னர் கலியபெருமாள் கூறுகையில், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புதிதாக தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர் தரமான கட்டுமானத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்தில் கோவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும் என தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது கோவில் செயல் அலுவலர் (பொ) ஹேமாவதி உடனிருந்தார்.

Tags:    

Similar News