உள்ளூர் செய்திகள்

மாயமான முதியவரின் பிணம் கிணற்றில் மிதந்தது

Published On 2023-03-18 14:39 IST   |   Update On 2023-03-18 14:39:00 IST
  • மகள் வீட்டுக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்
  • பெரம்பலூர் அருகே பரபரப்பு


அகரம் சீகூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொளார் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி (வயது 80)இவர் தனது மகளை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட வசிஷ்டபுரம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளை பார்ப்பதற்காக கணபதி வசிஷ்டபுரம் வந்தார். பின்னர் வெளியே செல்வதாக கூறி புறப்பட்டவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மகள், தந்தையை கடந்த ஒரு வாரமாக தேடி வந்தார்.இந்த நிலையில் அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. பின்னர் கிராம மக்கள் கிணற்றில் எட்டி பார்த்தபோது அழுகிய நிலையில் ஒரு ஆண் பிணம் மிதந்து கொண்டிருப்பதை கண்டனர்.உடனே இது பற்றி குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் காவல் துறையும், தீயணைப்புத் துறையினரும் கிணற்றில் பிணமாக மிதந்த உடலை மீட்டனர்அதன் பின்னர் பார்த்தபோது கிணற்றில் சடலமாக மிதந்தவர் மாயமான கணபதி என்பது தெரியவந்தது.இவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை அடித்துக்கொண்டு கிணற்றில் வீசி விட்டார்களா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.இதற்கிடையே மகளின் வீட்டுக்கு வந்த கணபதி அகரம் சீகூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்தியதை சிலர் பார்த்துள்ளனர்.இதனால் போதையில் நிலை தடுமாறி பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து மடிந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.மகள் வீட்டுக்கு வந்த முதியவர் 8 நாட்களுக்குப் பின்னர் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




Tags:    

Similar News