உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-11-02 14:57 IST   |   Update On 2022-11-02 14:57:00 IST
  • வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • மன உளைச்சலில் நடந்த சம்பவம்

பெரம்பலூர்

கீழ எசனை கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் முத்தையா(வயது 35). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலக்கட்டையில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த வேலையும் செய்ய முடியாமல் படுத்த படுக்கையாக இருந்துவந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் சம்பவத்தன்று பருத்திக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வாந்தி எடுத்து கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

Tags:    

Similar News