உள்ளூர் செய்திகள்

மதனகோபால சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் வீதியுலா

Published On 2022-06-13 15:19 IST   |   Update On 2022-06-13 15:19:00 IST
  • மதனகோபால சுவாமி வெள்ளி கருட வாகனத்தில் வீதியுலா வந்தார்.
  • மகா தீபாராதனையும் நடைபெற்றது


பெரம்பலூர்:

பெரம்பலூரில் உள்ள பஞ்ச பாண்டவர் வழிபட்ட பெருமை பெற்ற மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோவிலில் அக்ரஹாரம் அய்யங்கார் சமூகத்தின் சார்பில் உலக சுபிட்சத்துக்காக பெருமாளுக்கு திருமஞ்சனமும், மகா தீபாராதனையும் நடந்தது.

இரவு மகா தீபாராதனையும், பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் திருவீதியுலா நடந்தது. திருமஞ்சனம் மற்றும் பூஜைகளை கோவில் பட்டாச்சாரியார் பட்டாபிராமன் நடத்தி வைத்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News