உள்ளூர் செய்திகள்
பொம்மனப்பாடி கிராமத்தில் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம்
- ஆடித்திருவிழாவை முன்னிட்டு பொம்மனப்பாடி கிராமத்தில் அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம்
- பாலகாட்டு அம்மனுக்கு பக்தர்கள் கூழ்படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் அடுத்துள பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள பாலகாட்டு அம்மன் கோவிலில் ஆடிதிருவிழா நடைபெற்றது. கடந்த வியாழன் அன்று வானவேடிக்கையுடன், ஏரியில் குடி அழைத்தல் நிகழ்ச்சியோடு தொடங்கிய விழாவில், வெள்ளி அன்று அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், சிறப்பு மலர் அலங்காரமும் நடைபெற்றது. அப்போது மழை வேண்டிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பாலகாட்டு அம்மனுக்கு பக்தர்கள் கூழ்படைத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இறுதியாக மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று, அம்மன் குடிவிடுதல் நிகழ்ச்சியோடு ஆடி திருவிழா நிறைவடைந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொம்மனப்பாடி கிராம மக்கள் செய்திருந்தனர்.