மாநில கபடி சேம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு
- மாநில கபடி சேம்பியன்ஷிப் போட்டிக்கான தேர்வு நடைபெற உள்ளது
- மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகம் சார்பில் மாநில கபடி சேம்பியன்ஷிப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு போட்டி நாளை(10ம்தேதி) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட அமெச்சூர் கபடிக்கழக தலைவர் முகுந்தன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ராஜ்குமார் ஆகி யோர் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், மயிலாடுதுரையில் வரும் 19ம்தேதி முதல் 21ம்தேதி வரை நடைபெறவுள்ள சிறுவர்களுக்கான மாநில அளவிலான கபடி சேம்பியன்ஷிப் கலந்துகொள்வதற்கான அணி வீரர்கள் தேர்வு போட்டி நாளை (10ம்தேதி) பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.
ஜூனியர் சிறுவர்களின் தகுதி வயதுவரம்பு 20.11.22 அன்று 20 வயதுக்குள் இருக்கவேண்டும், எடை 70 கிலோவிற்கு மிகாமல் இருக்கவேண்டும். தகுதியுடையவர்கள் ஆதார் கார்டு அல்லது 12 ம்வகுப்பு மார்க்சீட் ஆகியவற்றுடன் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.