உள்ளூர் செய்திகள்
தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு தடை விதிக்க வேண்டுகோள்
- தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்
பெரம்பலூர்:
தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன், பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் இயங்கும் தனியார் டயர் தொழிற்சாலையில் நிலக்கரி உபயோகத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மேலும் ஆலையில் கரும்புகை வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இவர் கடந்த வாரமும் இதே கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது."