உள்ளூர் செய்திகள்

விஜயதசமி பண்டிகை பெருமாள் வீதி உலா

Published On 2022-10-06 08:45 GMT   |   Update On 2022-10-06 08:45 GMT
  • விஜயதசமி பண்டிகை பெருமாள் வீதி உலா நடைபெற்றது
  • சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் தாலுகா,நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு பெருமாள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வரதராஜ கம்ப பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்த விழாவில் முக்கிய சிறப்பு நிகழ்வான பெருமாள் கோவில் முன்பு தென்னங்கிற்றில் பந்தல் அமைத்து வாழை மரம் கட்டி அதற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமிக்கு அம்பு விடும் பின்பு இரவு ஸ்ரீ வரதராஜ கம்பபெருமாள் சாமி அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கோவில் நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News