ஏரிக்கரை பகுதியில் பகுதிநேர அங்காடி திறப்பு விழா
- ஏரிக்கரை பகுதியில் பகுதிநேர அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.
- 222 குடும்ப அட்டைதாரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
பெரம்பலூா்:
பெரம்பலூா் அருகேயுள்ள எசனையில், நியாயவிலை அங்காடி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் வடக்குமாதவி ஏரிக்கரை பகுதியில் பகுதிநேர அங்காடி திறப்பு விழா ஆகியன நடைபெற்றது.
எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி, வடக்குமாதவி எரிக்கரை பகுதியில் பகுதிநேர அங்காடியை திறந்துவைத்த கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கூறியது:
எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வடக்குமாதவி முழுநேர நியாயவிலை அங்காடியில் 822 குடும்ப அட்டைகள் உள்ளதாலும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்களுக்கு சிரமமாக இருப்பதாலும் வடக்குமாதேவி ஏரிக்கரை பகுதியில் பகுதிநேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் 222 குடும்ப அட்டைதாரா்கள் பகுதிநேர அங்காடியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.