உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி

Published On 2022-07-16 15:19 IST   |   Update On 2022-07-16 15:19:00 IST
  • வாகன விபத்தில் ஒருவர் பலியானார்
  • முதியவர் படுகாயம் அடைந்தார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், மருதடி கிராமத்தை சேர்ந்த கதிரேசன்(வயது 37). இவரும் அதே பகுதியை சேர்ந்த சின்னையன்(65) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் காரை பிரிவு ரோட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி சென்ற கொண்டு இருந்தனர். அப்போது திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கதிரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சின்னையன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News