உள்ளூர் செய்திகள்

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி நிறுவனத்தில் புத்தாண்டு கேக் திருவிழா தொடக்கம்

Published On 2022-12-30 15:03 IST   |   Update On 2022-12-30 15:03:00 IST
  • அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி நிறுவனத்தில் புத்தாண்டு கேக் திருவிழா தொடக்கப்பட்டது
  • சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி சார்பில் ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு கேக் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதன்படி மூன்று நாள் நடைபெறும் 2023 புத்தாண்டு கேக் திருவிழா மற்றும் கண்காட்சி பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் நேற்று துவங்கியது.விழாவிற்கு அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் தலைமை வகித்து கேக் கண்காட்சியை திறந்து வைத்தார். அஸ்வின்ஸ் இயக்குநர்கள் செல்வக்குமாரி, அஸ்வின், சிபி, நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊர்க்காவல்படை மண்டல தளபதி அரவிந்தன், இந்தியன் ரெட்கிராஸ் கவுரவ செயலாளர் ஜெயராமன், ரோட்டரி கவர்னர் கார்த்திக், ஆதவ் பப்ளிக் ஸ்கூல் தாளாளர் ராஜேந்திரன், முன்னாள் நகராட்சி துணை தலைவர் அரணாரை மோகன்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ், தம்பு காபி பார் உரிமையாளர் பாலாஜி, மரகதம் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் சரவணன், மினி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தாமரைகண்ணன், வக்கீல் பாபு, செந்தூர் மெடிக்கல் சுகுமார், பகவதி கணேசன், பொறியாளர்கள் சிவராஜ், மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவையொட்டி கேக்திருவிழாவின் ஒரு பகுதியாக சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று (30ந்தேதி) மற்றும் நாளை (31ம்தேதி)் நடைபெறுகிறது. போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நாளை மாலை 4 மணிமுதல் இரவு 9 மணிவரை சின்னத்திரை புகழ் மெஜிசியன் மோகனின் மேஜிக் ஷோவும் நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் மேலாளர்கள் சுரேஸ், சூரி என்கிற வெங்கடேசன், அசோக்குமார், பி.ஆர்.ஓ சரவணன் ஆகியோர் செய்துள்ளனர்.


Tags:    

Similar News