உள்ளூர் செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா

Published On 2022-11-05 15:07 IST   |   Update On 2022-11-05 15:07:00 IST
  • நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது
  • அகரம்சீகூர் ஊராட்சியில்

பெரம்பலூர்:

அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டமுகாம் தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை ராஜன் முன்னிலை வகித்தார். ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு, ஒகளூர் பட்டதாரி ஆசிரியர் தங்கராசு வரவேற்புரை ஆற்றினார்.

முகாமில் அய்யனார் கோவில் வளாகத்தை சீரமைத்தல், அகரம்சீகூர் ஊர் பொது பாதைகளை சீரமைத்தல், வெள்ளாற்றங்கரை மேம்பால சாலைகளை சுத்தம் செய்தல், மேட்டு காங்கிராயநல்லூரில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தல். போன்ற அறிக்கையை ஒகளூர் அரசு மேல்நிலைப் பள்ளி சிலம்பரசன் விளக்கினார்.

முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்ச்செல்வன் நினைவு பரிசு வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட முகாமினை திட்ட அலுவலர் இளங்கோவன் ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் பெற்றோர் அ.தி.மு.க. கிளை செயலாளர் பிரபாகரன், ஆசிரியர் சங்க தலைவர் ராமராசு , அகரம்சீகூர் ஆசிரியர் அண்ணாதுரை, ஒகளூர் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் பெரியசாமி வெற்றிப் பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், ராஜகோபால் மற்றும் அகரம்சீகூர் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News