என் மலர்
நீங்கள் தேடியது "நாட்டு நலப்பணி திட்ட முகாம். COUNTRY WELFARE PROJECT CAMP"
- பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
- முகாமில் தொடக்க நிகழ்ச்சியாக அய்யனார் கோவிலில் மரக்கன்றுகள் நடப்பட்டது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட முகாம் தொடக்க விழா நடை பெற்றது.
முகாமிற்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், ஆண்டாள் குடியரசு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்துமதி தர்மராஜன் முன்னாள் ஆசிரியர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
முகாமில் தொடக்க நிகழ்ச்சியாக அய்யனார் கோவிலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் அகரம்சீகூர் கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் உள்ள புல், பூண்டு செடி கொடிகள் அகற்றப்பட்டன.
அதன் பின் கழிவு நீர் வாய்க்காலில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்பட்டன. மாலையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் நாகராஜன் எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முடிவில் ஆசிரியர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
- நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது
- அகரம்சீகூர் ஊராட்சியில்
பெரம்பலூர்:
அகரம்சீகூர் ஊராட்சியில் ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்டமுகாம் தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தை ராஜன் முன்னிலை வகித்தார். ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் ஆண்டாள் குடியரசு, ஒகளூர் பட்டதாரி ஆசிரியர் தங்கராசு வரவேற்புரை ஆற்றினார்.
முகாமில் அய்யனார் கோவில் வளாகத்தை சீரமைத்தல், அகரம்சீகூர் ஊர் பொது பாதைகளை சீரமைத்தல், வெள்ளாற்றங்கரை மேம்பால சாலைகளை சுத்தம் செய்தல், மேட்டு காங்கிராயநல்லூரில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தல். போன்ற அறிக்கையை ஒகளூர் அரசு மேல்நிலைப் பள்ளி சிலம்பரசன் விளக்கினார்.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்ச்செல்வன் நினைவு பரிசு வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட முகாமினை திட்ட அலுவலர் இளங்கோவன் ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் அ.தி.மு.க. கிளை செயலாளர் பிரபாகரன், ஆசிரியர் சங்க தலைவர் ராமராசு , அகரம்சீகூர் ஆசிரியர் அண்ணாதுரை, ஒகளூர் ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் பெரியசாமி வெற்றிப் பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், ராஜகோபால் மற்றும் அகரம்சீகூர் ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.






