உள்ளூர் செய்திகள்

மின் நுகர்வோருக்கு பெயர் மாற்றும் முகாம்

Published On 2023-07-27 12:43 IST   |   Update On 2023-07-27 12:43:00 IST
  • பெரம்பலூரில் மின் நுகர்வோருக்கு பெயர் மாற்றும் முகாம்
  • ஆணைகளை எம்.எல்.ஏ பிரபாகரன் வழங்கினார்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மின் வாரிய சிறப்பு பெயர் மாற்றம் முகாமில் 60 பேருக்கு பெயர் மாற்றம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தெரிவித்தார்.தமிழக அரசு சார்பில் மின் நுகர்வோர்கள் எளிமை யாக மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்காக மின்வாரியம் மூலம் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய ப்பட்டுள்ளது.இதன்படி பெரம்பலூர் நகர் பகுதியில் நடந்த முகாமில் உடனடி பெயர் மாற்றம் செய்து கொண்ட மின் நுகர்வோர் பயனா ளிகளுக்கு பெயர் மாற்றம் செய்வதற்கான ஆணையை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ பிரபாகரன் கலந்துகண்டு பயனாளிகளுக்கு பெயர் மாற்றத்தி ற்கான ஆணையினை வழங்கினார்.இதில் மின்வாரிய மேற்பா ர்வை பொறியாளர் அம்பிகா கூறியதாவது-அரியலூர் மற்றும் பெர ம்பலூர் மின் கோட்டத்தில் இதுவரை 90 ஆயிரம் பேர் பெயர் மாற்றம் செய்ய வேண்டி உள்ள நிலையில், தற்பொழுது தமிழக அரசின் சார்பிலும் தமிழக மின்வாரியத்தின் மூலம் பெயர் மாற்றத்தை எளிமை ப்படுத்தும் வகையில் இந்த ஒரு மாத சிறப்பு முகம் ஏற்பாடு செய்ய ப்பட்டு ள்ளது நடைபெற்று வருகிறது.இந்த முகம் மூலம் குறைந்தது 60 ஆயிரம் பேருக்கு மின் நுகர்வோர் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயி க்கப்பட்டு ள்ளது. எனவே பெயர் மாற்றம் செய்ய வேண்டிய மின் நுகர்வோ ர்கள் தேவையான ஆவணங்களை முகா ம்களில் அலுவல ர்களிடம் கொடுத்து உடனடி யாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பி னை பயன்படுத்தி கொ ள்ளலாம் என தெரிவி த்தார்.நிகழ்ச்சியின் போது செயற்பொறியாளர்கள் சேகர், அசோக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் முத்தமிழ் செல்வன், செல்வராஜ், காயத்திரி, பாண்டியன், வெங்கடேசன், உதவி மின் பொறியாளர்கள் சரவணன், இனிதா, அரவிந்த், அகமது மற்றும் மின்வாரிய ஊழியர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News