உள்ளூர் செய்திகள்

மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

Published On 2023-10-16 09:28 GMT   |   Update On 2023-10-16 09:28 GMT
  • விசுவக்குடியில் மழை வேண்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
  • இமாம் முஹம்மது சுலைமான் தலைமையில் நடைபெற்றது

பெரம்பலூர்,

மழை பெய்ய வேண்டி விசுவக்குடியில் சிறப்பு தொழுகை நடத்த ஜமாத்தார்கள் முடிவு செய்தனர். அதன்படி விசுவக்குடி பகுதியில் வறட்சி நீங்க, மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை விசுவக்குடி அத்-தக்வா பள்ளிவாசலின் இமாம் முஹம்மது சுலைமான் தலைமை தாங்கி நடத்தினார். அதனைத்தொடர்ந்து பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

Tags:    

Similar News