உள்ளூர் செய்திகள்
- மோட்டார் சைக்கிள் திருட்டு போனது
- நர்சிங் ஹோம் முன்பு நிறுத்தியிருந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் அண்ணா நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 40). டாக்டரான இவர் தனது நர்சிங் ஹோம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் அவர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது தொடர்பாக விஜய் ஆனந்த் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.