உள்ளூர் செய்திகள்

மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை

Published On 2022-07-25 10:25 GMT   |   Update On 2022-07-25 10:25 GMT
  • மாரியம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது.
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் கிராமத்தில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு மாலையணிந்து, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

Tags:    

Similar News