உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளை திருட முயன்றவர் கைது
- மோட்டார் சைக்கிளை திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
- பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த குணா (28) என்பவர் திருட முயன்றார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மடக்கி பிடித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.