உள்ளூர் செய்திகள்

வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவருக்கு சிறை

Published On 2022-07-13 08:53 GMT   |   Update On 2022-07-13 08:53 GMT
  • வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாம்

பெரம்பலூர்:

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த துரைராஜ். இவரது மகன் பெரியசாமி (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்கள் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது பெரியசாமிக்கும், சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த செல்லமுத்துவின் மகன் சூர்யாவுக்கும் (26) இடையே முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த சூர்யா கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்தில் குத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி இருந்த சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சூர்யா ரவுடி என்று போலீசார் தெரிவித்தனர்."

Tags:    

Similar News