உள்ளூர் செய்திகள்

மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2022-09-10 08:38 GMT   |   Update On 2022-09-10 08:38 GMT
  • பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
  • விநாயகர், மகா மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

அதனை தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் விநாயகர், மகா மாரியம்மன் கோவிலின் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

விநாயகர், மகா மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர், மகா மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

இரவில் அம்மனுக்கு பொங்கலிட்டு, மாவிளக்கு பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து உற்சவ அம்மன் வீதி உலா வந்தார். இதற்கான ஏற்பாடுகளை குரும்பலூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News